தீ பிழம்பிலிருந்து
கொஞ்சம் தீ வாங்கி
இருண்டிரும் பிரபஞ்சத்தை
விளக்கேற்றி வைக்கிறாய்!
கண்ணிருந்தும் இருட்டில்
குருடர்களாகி போகும்
மனிதருக்கு ஒளியாகி
வழிக்காட்டுகிறாய்!
தனிந்த பொழுதுக்கு
உயிர் ஊட்டி கவிதையெழுதும்
கவி பெருமக்களின் கவிப்பொருளாய்
உருமாறுகிறாய்!
நேசங்களைப் பிரிந்து
துயிரும் நெஞ்சங்களை
அரவணைத்து, புத்துயிர்
தந்து துயில் கொள்ள செய்கிறாய்!
வெண்முகம் காட்டி,
இயற்கையன்னையின்
அழகை மெருகூட்டிடும் நீ
பிரபஞ்சத்தின் பொக்கிஷம்!
நிலா
Labels: ரசித்தவை
விழித்துப் பார்க்கிறது இரவு!
ஆள் நடமாட்டமில்ல தெரு
பைரவனின் குரலடங்கா பொழுதது
சன்னலின் வழி வானத்தை
வெறித்தப்படி அவள்...
இவ்வேளையில்
கதைச் சொல்ல
நிலவு வரும்
ஆயிரம் வீண்மீன் கூட்டமிருக்கும்
இன்று,
கருவிழி காணுமிடங்கெங்கும்
கருங்கிருட்டு!
விழி சுருக்கி,
கருங்கிருட்டை
துளைக்க முயல்கிறாள்
அவள்...
சலனமின்றி
அவளையே
விழித்துப் பார்க்கிறது
இரவு!
(உரையாடல் கவிதைப் போட்டிக்கான கவிதை)
Labels: தனிமை
தாகங்கள்...
வாழ்க்கையின் தாகங்கள்
முடிவில்லாதவை....
ஒரு நிலையில்
மழை நீர் போதும்
என சொல்லும்...
இன்னும் கொஞ்சம் போக
அருவி நீரை வேண்டும்
என சொல்லும்...
இறுதியைக் கடக்க
சேற்று நீரை அள்ளிக் கொள்
என சொல்லும்...
அதுவும் போதாமல்,
உலகிலுள்ள நீரையெல்லாம்
தானம் கேட்டு, தாகம் தீராமல்...
உன்னிடமும் கையேந்தும்,
உன் கண்ணீருக்காக...
Labels: பொது
சில துளிகள் (2)
பூங்கா
இரு மரங்கள்
10 தடி இடைவெளி
இரண்டு நற்காலிகள்
அருகே,
சில புதர்கள்...
*
சாமி
மூன்று கல் நட்டு,
சிறிய கூரை வேர்த்து,
சுடர் விட்டு எரியும்
தீபம்...
*
வீட்டிற்கு ஒரு மரம்
300 வீடுகளைக்
கொண்ட அடுக்குமாடிக்
கட்டடம்...
அதைச் சுற்றி
30 தென்னங்கன்றுகள்!
*
விஞ்ஞானம்
இரவு பகல் பராமல்,
மனிதன் உறங்க ஆரம்பிக்க,
வேலை பார்க்க தொடங்குகின்றது
கணினி!
அந்திம பூக்கள்
அந்தி வகுப்பை
உதறி தள்ளிவிட்டு
மரத்தாடியில் அவள்...
போவோர் வருவோர்
பார்வையிலிருந்து தப்பிக்க
புத்தகத்தில் தலைப்
புதைத்த வண்ணம்..
ஒரு தரம், அவள் பார்வை
கடிகார முள்ளை
துளைத்து விட்டு எதிரே
நீண்ட சாலையை நோக்க...
கண்களில் எதிர்பார்ப்பை
மிஞ்சுகின்றது ஏமாற்றம்!
சாலையோர பூக்கள்,
துயிர்கொள்ள ஆயுதமாகியும்..
எதிர்பார்த்தவன் வரவில்லை
மெல்ல எழுந்து நின்றவளின்
பார்வை இருண்ட
எதிரே படர்ந்த வெளியில்
அவன் இன்னொருவனின்
கைப்பிடித்து நடக்க...
கோபமும் அழுகையும்
இரு பரிமாணங்களாக
மாறி மாறி
அவளை தாக்க..
தன்னிலை மறந்தவளாக
கால்கள் வீட்டை நோக்கி
அடி வைக்கின்றன...
அந்திம பூக்களோ
நாளை வரும் விடியலை
எதிர்கொள்ள இருளில்
முகம்புதைக்கின்றன...
Labels: பொது
மழலை கவிதை
கைக்காட்டி
வானத்தைப் பார்த்து
சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாள்
அந்த சின்ன கண்மணி...
அவளின் ஆனந்ததை
பங்கு கேட்க அவளருகில்
சென்றமர்ந்தேன்...
கண்கள் பளக்க
என்னைப் பார்த்தவள்
மெதுவாக கிசுகிசுத்தாள்
"பூவானம் கண்ணடிக்குது"
புரியாமல் இருண்ட
வானத்தைக் கூர்ந்தேன்
அவளைப் போல்
மணி மணியாய் கண்சிமிடியது
அவளமைத்த
நட்சத்திர பூவனம்!
Labels: மழலை
ஒரு காதலனும் ஒரு காதலியும்...
கவிதை சொல்வதே அவனின் வேலை..
அவள் விரும்பி கேட்பதால் விடாமல் சொல்கிறேன்...
தினமும் தூங்க விடாமல் பேசுகிறான்...
நான் அழைப்பேன் எனக் காத்திருப்பாளே என அழைக்கிறேன்...
எனக்கு பரிசுகள் கொடுப்பதே அவன் வழக்கம்..
அவளின் கண்கள் சிரிப்பதைக் காண ஆவல்...
இவன் என்னிடம் ஜெயித்ததே இல்லை...
அவள் மனம் வாட விடமனமில்லையே...
கனவுலக மன்னன் இவன்...
கனவுகளின் காட்சியலயமே இவளாக இருக்கும் போது ஏன்செய்வேன் நான்...
(சிணுகல்கள் தொடரும்..)
சில நொடிகளில் வெறுமையாகும் மனது..
பேருந்தில் ஏறி
மனித கூட்டத்தில் அடிப்பட்டு
அலுக்கு துணியாகி வீடு சேரும்
என் அந்தி வேளையாகும்...
அதிகாரியிடம்
செய்யாத தவறுக்கு திட்டு
வாங்கி சிலையாக நிற்கும்
என் அலுவலக நொடிகளும்...
இதுதான் நான்
என்ற நிலையை இழந்து
ஊமையாகும் என்னை நினைத்தும்...
மெளனங்களை தவிர
வார்த்தைகளை தாரை வார்க்க இயலாமல்
கன காற்றை என்னில் திணிக்கும்
சுற்றத்திலும் சுழ்நிலையும் கவனித்தும்...
சில நொடிகளில்
உண்மையாகவே
வெறுமையாகி தான்
போகிறது மனது!
Labels: பொது
எல்லை
வெறுப்பின் எல்லையில் அன்பு...
அழுகையின் எல்லையில் சிரிப்பு...
உணவின் எல்லையில் மருந்து...
இறப்பின் எல்லையில் பிறப்பு...
கனவுகளின் எல்லையில் நிஜங்கள்...
கடவுளின் எல்லையில் அனைத்தும் அழகு..!
Labels: பொது
ஒரு மழை விட்ட நாளில்...
சன்னலின் ஒரத்தில்
முத்து முத்துக்களாய் வரிசை
நிற்கும் மழைத்துளிகள்...
சாலையோர
நீர் தேக்கங்ளில்
காதித கப்பல்
விடும் மழலைகள்...
தாமரை இதழிலிருந்து
நிலத்தை எட்டி பார்க்கும்
ஒற்றை நீர் துளி...
ஆனந்த குளியலால்
வெப்பமரக்கிளையில் தலைத்தொட்டும்
புறாக்கூட்டம்...
பூமியின் வெப்பத்தைத்
தட்டி எழுப்பும் மழைக்காற்றை
வரவேற்க்கும் முற்றத்து
கற்றாடிகள்...
ஒரு கோப்பை தேநீரை
ருசித்தப்படி
கதவோரத்தில் நான்...
Labels: ரசித்தவை
இதோ என் ஆசிகள்!
நல்வாழ்வு உன்னை வந்தடைய
இதோ என் ஆசிகள்!
புகழ் சூட வாழ
கல்வியை வெற்றிடு!
ஆற்றலை அணையின்றி வெளிப்படுத்தி
வெற்றியை உன் வசமாக்கிடு!
துணிவென்பதை துணியாக உடுத்திக்கொள்,
இளமையை இனிமையுடன் நகர்த்திடு!
பொன் - பொருள் இல்லார்க்கு இவ்வுலகமில்லை,
நன்மக்களைப் பெற்று மகிழ்ந்திடு!
நெல் சோறாகும் தருணம்,
உன்னை உயர்த்திய உழைப்பை அனுபவித்திடு!
உன் பெருமை தாரணியை சுழ,
என்றும் நல்லுள்ளம் கொண்டு வாழ்ந்திடு!
இன்பங்களில் பெரிது நோயின்மை,
உன் ஆயுளைத் தடையின்றி நீடித்திடு!
வாழ்த்து கூறிட வார்த்தைகள் நூறு வேண்டாம்!
புனித உள்ளம் ஒன்றே போதும்...
Labels: வாழ்த்து
நின்மலன் (நான்)...
நீ சிந்தும் புன்னகைக்கே,
சிவந்த பூவாய் பூத்து கிடக்கும் பூமி...
நீ பார்க்கும் பார்வைக்கே,
இலை வெட்டுகளை இணம் கேட்கும் மரங்கள்...
நீ பேசும் பேச்சுகளுக்கே,
ஓடை நீரின் மொழிகளை ஒதுக்கும் ஓடை மீன்கள்...
நீ கொண்ட காதலுக்கே,
வானம் கொண்ட வீண்மினை வம்புகிழுக்கும் நின்மலன் (நான்)...
Labels: காதல் கவிதை
நீ என்பதால்...
நீ என்பதால்,
பனியின் வரவுக்கு காத்துகிடக்கும் காலைபொழுது, நான்...
நீ என்பதால்,
மழைத்துளியை எட்டி பிடிக்க தவிக்கும் தளிர், நான்...
நீ என்பதால்,
காற்றோடு போட்டி போடும் செம்பந்தியின் வாசம், நான்...
நீ என்பதால்,
குட்டி பொம்மைகளுடன் தூங்கும் களங்கமில்லாத குழந்தை, நான்...
நீ என்பதால்,
புத்தகத்தில் சிறுவன் எழுதிடும் முதல் வடிவம், நான்...
நீ என்பதால்,
பல கோணங்களில் உருகுலையும் உயிர்கொண்ட காதல்மேகம், நான்...
Labels: காதல் கவிதை
வாழ...
சர்வ தேசங்களைச்
சுற்றி திரியும் காற்றே...
கனவின் கதவுகளை
திறந்து வை...
காணும் காட்சிகளை
நிஜங்களாக்கி,
மானிடரை
வாழ வழி செய்...
Labels: கனவு
காத்திரு...
நிஜங்களில் வாழ்ந்தாலும்
கனவுகளை மறக்காதே.
கண் மூடி தெரிவது இல்லை கனவு...
கண் திறந்ததும் முடிவதுமில்லை கனவு...
கனவு கைசேரும் வரை
காத்திரு...
அதை வெல்லும் வரை
உயிர் கொள்...Labels: தற்முனைப்பு
மறந்து போகும் நான்...
கண் மூடி ரசிக்க தோணும்
மெல்லிய இசை நீ...
தேகத்தை வருடி விடும்
இள தென்றல் நீ...
இலைகளின் அசைவுகளில்
பேசிக் கொள்ளும் மெளனம் நீ...
கலைந்து கிடக்கும் மேகங்களின்
திரட்டேடு நீ...
காணும், உணரும் யாவற்றிலும் நீயாக
இருக்கும் போது, நான் யார் என்பதை மறந்து தான் போகிறேன்,
பரந்தாமனே...
Labels: பக்தி
அழகு என்பது...
வானவில்லில் மட்டுமில்லை
கொள்ளையழகு...
தன் இலைகளை மண்ணுக்குத் தானம்
தந்து விட்ட அந்த காய்ந்த மரத்துக்கும்
உண்டு உண்மையழகு...
நட்பு...
கரும்பொழுதை
மூச்சிரைக்க செய்யும்
பவளமல்லியின் மணமாய்
உன் நட்பு...
என் சுவாசத்தில்
எப்பொழுதும்
சுழன்ற வண்ணமாய்
இருக்கும்...
Labels: நட்பு
சில துளிகள்
ஆசைகள்
நீர் குமிழ்களைப் போன்றது
நொடி பொழுதில் காற்றில்
மிதந்து காணமல்
கரைபவை...
**********************************************
காதலி
யாரை வேண்டுமானாலும்
நீ காதலிக்கலாம்..
அவளைப் புரிந்து கொண்டும்,
அவளைக் கைப்பிடிப்பதும்,
சுலபமல்ல!
**********************************************
காதல் உணர்வு
முகம் உணர்வுகளின் பிரதியலிப்பு
என்கிறார்கள்..
காதல் வந்தால் மட்டும்
சல்லனமின்றி இருப்பது எனோ?
********************************************
விதிமுறைகள்
மனிதனை
நெறிப்படுத்துவதற்கே..
நெரிப்பதற்கு அல்ல!
*********************************************
மெளனமாகவே...
பூக்களிடம்
மெளனங்களைச் சேகரித்து
கொண்டு இருக்கிறேன்...
மழைத்துளி தன்னை வருத்தினாலும்,
பெருங்காற்று தன்னை தூர வீசி எறிந்தாலும்,
நிமிர்ந்து நின்று புன்னகை பூக்கும்
அந்த பூக்களிடமிருந்து,
மெளனங்களைச் சேகரித்து
கொண்டு இருக்கிறேன்...
கல்விக்காக…
புத்தகம்
கைகளில் எடுக்க
நிதானிக்கும்
அவன்,
சாமியிடம்
வேண்டுகிறான்,
"கடவுளே, நான் நல்ல படிக்கணும்.."
*
புத்தகப்பையை கூட
கழற்றாமல்
குப்பைத்தொட்டியின்
அருகே அவன்…
தூரத்தில் அவன் அப்பா…
"போத்தல், டின் இருந்தா
கிளறி எடுத்துட்டு வா…"
"இதை வித்தா தான் உனக்கு
புக்கு வாங்க முடியும்"
*
பள்ளியில்
பிரதேக வகுப்பு…
படிக்க போகணும் என்ற ஆசையில்
பள்ளிக்கு அழைத்து போக சொல்லி
வேண்டுகிறான் அச்சிறுவன்,
பெற்றவர் சொல்கிறார்,
"மோட்டார் எண்ணெய் செலவுக்கு
உன் வாத்தியாரை பத்து ரிங்கிட்
தர சொல்..
சரியென்றால் கூட்டிப் போரேன்!"
*
ஆரம்ப பள்ளியில்,
படிப்பில் கெட்டியென
பெயர் எடுத்த மாணவி…
இடைநிலைப்பள்ளியிலும்
தன் பெயரை நிலைப்பெறுதல் வேண்டும்
என ஆவா கொண்ட மாணவி…
படிக்க ஏங்கும் இவளின் கெஞ்சலுக்குக்
கிடைக்கும் பதில்,
"படிச்சது போதும்."
"இதுக்கு மேல படிக்க வைக்க காசு இல்ல"
விடாமல் வேண்டுகிறாள்,
கடவுளிடம்,
"சாமி, அப்பாக்குக் காசு கொடு."
"நான் படிக்கணும்."
Labels: பொது
‘பிரிவு’
பிரிவுயென்னும் சொல்லின் பின்
ஒளிந்திருக்கும் அர்த்தம்,
புரியாத புதிராய்
பூட்டி வைத்திருக்கும்
அறையில் சுழழும்
காற்றாய்
இன்னும் என்னுள்
சுழன்ற வண்ணமாய்…
விடை காண முற்படும்
பொழுதெல்லாம்
மனதில் எதோ பாரம்…
என்னை அழுத்தி கொன்று விடுகின்ற மாதிரி
ஒரு உணர்ச்சி!
கண்களில் பெருக்கெடுக்கும்
கண்ணீர் வெள்ளத்தை
கட்டுபாடுயின்றி கன்னங்களை
நனைக்க…
மீண்டும் முணுக்கின்றது
என் உதடு!
‘பிரிவு’
இன்னொரு மரண
போராட்டத்திற்கு
தயார் ஆகின்றேன்
நான்!
Labels: காதல் கவிதை
மௌனங்களில் வாழ ஆரம்பிகிறேன் நான்…
வேலை முடிந்து
சாலை நெரிசலில் மாட்டி
வாடகையறைக்கு வந்து,
குளித்து,சாப்பிட்டு
மடி கணினியில்
படங்கள் பார்த்தும்,
பாடல்கள் சில கேட்டும்,
யாருடனும் பேச வேண்டிய
அவசியமின்றி
மௌனங்களில் வாழ ஆரம்பிகிறேன் நான்…