சிதறிய கவித்துளிகள்...

மனம் சிதறிய சில கவித்துளிகளுடன் நான்...

சில நொடிகளில் வெறுமையாகும் மனது..

பேருந்தில் ஏறி
மனித கூட்டத்தில் அடிப்பட்டு
அலுக்கு துணியாகி வீடு சேரும்
என் அந்தி வேளையாகும்...

அதிகாரியிடம்
செய்யாத தவறுக்கு திட்டு
வாங்கி சிலையாக நிற்கும்
என் அலுவலக நொடிகளும்...

இதுதான் நான்
என்ற நிலையை இழந்து
ஊமையாகும் என்னை நினைத்தும்...

மெளனங்களை தவிர
வார்த்தைகளை தாரை வார்க்க இயலாமல்
கன காற்றை என்னில் திணிக்கும்
சுற்றத்திலும் சுழ்நிலையும் கவனித்தும்...

சில நொடிகளில்
உண்மையாகவே
வெறுமையாகி தான்
போகிறது மனது!

0 comments:

என்னைப் பற்றி சில வரிகள்...

கவியுலகில் காலுன்றி நடைப் பயில ஆசை!
பிழையிருப்பின் கைநீட்டி உதவிக்கோரும் சிறு குழந்தை நான்!