பேருந்தில் ஏறி
மனித கூட்டத்தில் அடிப்பட்டு
அலுக்கு துணியாகி வீடு சேரும்
என் அந்தி வேளையாகும்...
அதிகாரியிடம்
செய்யாத தவறுக்கு திட்டு
வாங்கி சிலையாக நிற்கும்
என் அலுவலக நொடிகளும்...
இதுதான் நான்
என்ற நிலையை இழந்து
ஊமையாகும் என்னை நினைத்தும்...
மெளனங்களை தவிர
வார்த்தைகளை தாரை வார்க்க இயலாமல்
கன காற்றை என்னில் திணிக்கும்
சுற்றத்திலும் சுழ்நிலையும் கவனித்தும்...
சில நொடிகளில்
உண்மையாகவே
வெறுமையாகி தான்
போகிறது மனது!
சில நொடிகளில் வெறுமையாகும் மனது..
Posted by
G.VINOTHENE
Tuesday, August 18, 2009
Labels: பொது
0 comments:
Post a Comment