சிதறிய கவித்துளிகள்...

மனம் சிதறிய சில கவித்துளிகளுடன் நான்...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!





என் காதல்!

சிறகு முளைத்த
சின்ன பறவை
என் காதல்!

பறக்க துடித்தாலும்
நிதானமாய்
தயங்கி நிற்கிறது
அது!

கீழே விழுந்து
விடுவோமா
என்ற பயம்
ஒரு புறம்!

உயரத்தை
உணர்ந்த கலக்கம்
ஒரு புறம்!

எது எப்படியாயினும்
அதன் சிறகுகளை
முடுக்கி விட
வேண்டும்!

துளிர்க்கும் நட்பு!

துளிர் விட்டிருக்கும்
இளம் இலையை
தொட்டு பார்க்கும்
ஆவலில்
பிஞ்சு விரல்களை
நீட்டுகிறாள் அவள்!

எங்கே
அவள் கிள்ளி விட
போகிறாள்
என்ற பயத்தில்
அவள் அன்னையிடமிருந்து
புறப்பட்டது,
கனல் சொற்கள்!

கண்களில்
நீர் எட்டி பார்க்க
சின்ன தேம்பலுடன்
உள் நுழைத்து விட்டாள்
அந்த சின்ன பெண்!

அரை நொடி தாண்டி
அவள் வெளியே வருகையில்
சின்ன செடியுடன்
ஒரு சிறுவன்!

“இதை தொட்டுப் பார்,
நான் ஏச மாட்டேன்”
என அவன் சொல்லி
அதை நீட்ட,
அந்த இருவரும்
சேர்ந்து சிரிக்க…

ஒர் இளம்,
அழகிய
உறவு,
துளிர் விட
தொடங்கிறது!

என் காதல்!

பனி இரவை
காம்பு நுனியில் நின்று
தவம் செய்யும்
பவள மல்லியாய்
என் காதல்!

நீ
வந்தால் மட்டுமே
தரையில் விழுந்து
உயிர்ப்பிக்கும் அது!

காதல் கனல்!

எனக்கு பிடித்த பூ எது
என நீ கேட்கிறாய்…
நேர்மையெனும் பூவை
எனக்கு பரிசளி!
நம் காதல் செழித்து வளரும்!
*
உனக்காக
உயிரை கூட விடுவேன்
என
நீ பேசும் காதல் மொழி
ஒரு புறமிருக்கட்டும்!

முதலில்,
உன் உயிரை
புகையாய் கரைத்திடும்
வெண் சுருட்டை விடு!
*
என்னை
நிலைகெட
செய்யும்
ஒரே மாது
நீதான்
என குற்றம்
சாட்டுகிறாய்!
எப்போது,
உணர போகிறாய்?
உன் நிலையழியே
அந்த மது தான்
என!

என்னிதயத்தை மீட்க…

தினமும்
அந்தி சாயும் வேளையில்
கைகளில் எதோ ஒரு
இசைக்கருவியை வைத்து
இசை பழகி கொண்டிப்பது
உன் வழக்கம்…

வானம் மெல்ல கறுத்துக் கொண்டு வர
உன் பாடத்தை நிறுத்திக் கொள்ள
எத்தனிப்பாய்
இதுவும் உன் வழக்கம்…

மரமோரம் சாய்ந்து நின்று
உன்னையும் உன் இசையும்
ரசிக்கும் என்னை
பார்த்ததும் பார்க்காமல்
போகுவதும் உன் வழக்கம்…

இப்பொழுதெல்லாம்
உன்னை நிறுத்தி
ஒன்று கேட்க
தோணுது எனக்கு…

இசையை
நீ என்னவோ மீட்க கற்று விட்டாய்
சேர்ந்து எனக்கும் கற்று கொடென்…
உன்னில் தொலைந்த
என்னிதயத்தை மீட்க…

காதலே…

காந்தம் கைவாசம்
வைத்திருக்கிறாயா?
அப்பாப்பா…
எத்தனை மனிதர்கள்
உன் வசம்!
*
நீ
நீர் ஊற்றி அல்ல…
உயிர் ஊற்றி!
*
உன்னை
மோசமாக
கிறுக்கினாலும்
எப்பொழுதும்
போல
அழகாய்
தெரிகிறாயே
எப்படி?
*
சூரியனை மட்டும்
விழி வாங்கும் சூரிய கந்திகள்
இன்று உன்னை பார்க்கின்றன !
அது சரி…
மற்றங்களை ஏற்படுத்துவதே
உன் கலையாயிற்றே!
*
உலகில் உள்ள
மொத்த மலர்களையெல்லாம்
விலைக்கு வாங்கி விட்டயா?
உன்னை சொல்லிட
எப்போதும் இவைகளையே
தூதுக்கு அனுப்புகிறாயே?
*
கொஞ்சம் கொஞ்சமாய்
கருகும் குச்சியில்
தீயில்லை…
இருந்தாலும்
சுடர் விடுகிறதே
தீக்குச்சி !
இதுவும்
உன் வேலையோ?
*

அம்மாவுக்காக ஒரு வாழ்த்து!



மகிழ்ச்சியில் நான் குதித்தாடும்
பொழுதெல்லாம் என்னோடு
சேர்ந்து கொள்ளும்
உன் குதுகாலம்!

முகம் வாடிம்
பொழுதெல்லாம்
என்னமா என
கேட்கும்
உன் கரிசனம்!

தவறுகளை
சுட்டி காட்டி
என்னை செம்மைப் படுத்தும்
உன் அறிவுரைகள்!

சோர்ந்து போகும்
நேரங்களில்
ஊன்றுக்கோலாய்
நீ தரும்
ஊற்சாகம்!

சிறுங்காயமனாலும் சரி
பெருங்கீறலனாலும் சரி
பட்டென பதறும்
உன் தாய்மை!

அடிக்கடி
கிண்டல் செய்து
வம்பு இழுக்கும்
என்னை
புன்னகையுடன் பார்க்கும்
உன் அன்பு!

மழையில் நீ நனைந்தாலும்
சிறுத்துளிக்கூட என்மேல்
படாமல் வீடு சேர்க்கும்
உன் பரிவு!

இப்படி
எதைச் சொல்லி,
எதை நான் விட?

உலகில்
அனைத்துக்கும்
வரையறை வைத்திருக்கும்
அந்த கடவுள்,
உன்னை அழைத்திடவும்
உன் புகழ் பாடிடவும்
என்னை கோடிட்டு
நிறுத்தி விடவில்லை!

நான் வாழும் வரை,
உன்னையும் வாழ வைப்பேன்…
நீடுழி வாழ வாழ்த்துகிறேன், என் அன்புத் தோழியே…

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்,அம்மா…!

(இன்று என் அம்மாவின் பிறந்தநாள்.. அவர் என்றும் நலம் வாழ இறைவனை பிராத்திக்கிறேன்..அம்மாவுக்காக ஒரு சின்ன சமர்பணம்...)

தொலைக்க விடாமல் மனம்...




வீசும் தென்றல்
மெல்ல என் இதயகதவுகளை
திறந்து வைத்தது...

அங்கே
நான் பூட்டி வைத்திருந்த
காதலை
அதனுடன் கொண்டு
சென்றது...

பெயும் மழையில்
என் காதலும்
சேர்ந்தே நனைகின்றது...

சுழல் காற்றிடையே
என் காதல்
சிக்கிக் கொண்டு
தவிக்கின்றது...

என் மனமோ
பட படக்கின்றது...
எங்கே
அது தொலைந்து
விடுமோ என...

தொலைக்க
நினைக்கிறேன் நான்...
தொலைக்க
விடாமல் மனம்...


காதல் அலை!

கரைத்தொடும் அலையைக் கண்டு வரலாம்


என கிளம்புகையில்


உன் சிரிப்பலைக் கண்டு


ஸ்தமித்து நிற்கிறேன்…


என்னிதயதையும் சேர்த்து


அதனுள் தொலைத்து விட்டு !



********

ஒரு நகரத்தை

மூழ்கடிக்கும் வலிமை

அந்த கடலுக்கு

இருக்குமானால்,

என்னிதயத்தை

மூழ்கடிக்கும் வலிமை

உன் காதலுக்கும் உண்டு !

ஈழத்துக்காக...

போரில் வெற்றி வாகை
சூடிக் கொண்டேயிருக்கிறேன்
என எதை வைத்து
எக்காளித்துக் கொண்டிருக்கிறாய்?

நீ வெற்றது
வெறும்
பிணக்குவியல்!
ஆத்மாக்களின் கதறல்கள்!

இனி
வெல்ல போவதும்
உயிர்களின் சாபங்கள்
மட்டும் தான்!

எத்தனை அனுமானங்கள்!

நீ போகும் பாதையில் உதிர்ந்து கிடக்கும் பூவாயிருந்து
என் காதலை சொல்கிறேன்,
நான் கிழே கிடப்பதால் உன் செவிகளுக்கு எட்டவில்லை போலும்...


உன் முகத்தை தொட்டு செல்லும் காற்றில் கலந்து
என் காதலை சொல்கிறேன்,
உன்னை மோதி செல்வதால் நீயுணர வில்லை போலும்...


நீ விளையாடும் மழைத்துளிகளில் ஒன்றாயிருந்து
என் காதலை சொல்கிறேன்,
நான் உருண்டோடி விடுவதால் நீ கவனிக்க வில்லை போலும்...


இப்படி எத்தனை அனுமானங்களை நானே உருவாகிக் கொண்டு
இந்த காதலை ஏமாற்றுவது?

எப்படி சொல்லி புரிய வைப்பது?

"ரொம்ப துணிச்சலான பெண்"யென
சுற்றித்தாரிடமெல்லாம் நல்ல பெயர் எனக்கு...

வெகு நாளாய் உன்னிடம்
காதல் சொல்ல சொல்லி
மன்றாடுகிறது மனது..

நாளை சொல்கிறேன் என
நாட்களை தள்ளுகிறேன் நான்..

இப்பொழுதெல்லாம்
ஏமாற்ற கனலில் மனம்...

எப்படி சொல்லி புரிய வைப்பது?

நீ எதிரே வருகையில்
ஒட்டு மொத்த துணிச்சலும்
என் பின்னால் அல்லவா
ஒளிந்து கொள்கிறது....

சிலிர்கிறது பேருந்து!

வெகு நேரமாய்

பேருந்தின் வெளியே

உன் பார்வை...

சூரியனின் ஒளிக்கதிர்கள்

சன்னலை ஊருடுவி

உன்னை தாக்க

கண் சுருக்கி,

உடல் சிலிர்கின்றாய் நீ...

சேர்ந்து சிலிர்கிறது

பேருந்தும்,

உன்னைக் கண்டு...

தமிழ்

உன்னை தெரியாது என
உடல் சிலிர்ப்பவனையும்,

உன்னை பற்றி சொல்லி தரவில்லையென
பிறரைக் கைக்காட்டுபவனையும்,

உன்னை தெரிந்தும்,
தெரியாது போல் பாசாங்கு செய்பவனையும்,

"கண்டு உனக்கு கோபமே வராதா"
என நான் கேட்க,
துளி சிரிப்புடன் பதில் சொல்கிறாய்...

அவன் விழுந்தால்
"அம்மா" என
என்னைச் சொல்லி அழுகிறான்...

அவன் பதறினால்
"அய்யோ" என
என்னைச் சொல்லி கூவுகிறான்...

அவன் பெயரை அழைப்பவர்கள் கூட
என்னைச் சொல்லி தான் அழைக்கிறார்கள்...

இப்படியிருக்க
நான் வேறு
என்ன செய்ய வேண்டும்
இவர்களை?

"வாழ்க நீ"
என குதுகலமாய் நான்!

தோல்விகள்!

தோல்விகள் என்பது,

நம்மை

சிதைப்பதில்லை,

செதுக்குபவை!

மனைவி...

சமையல் அறையில்,
கருங்புகைக்குள்
அடிக்கடி காணமல்
போபவள்...

மழைத்துளிகளிடையே
தோய்த்த துணிகளை
காப்பாற்ற ஓடுபவள்...

அழும் சிறு குழந்தையை
மார்பில் அணைத்து
சிரிக்க வைப்பவள்..

வேலைக்கு போனாலும்
வீட்டு வேலைகளை
விட்டு வைக்காமல்
கவனிப்பவள்..

கணவன் முகத்தில்
தெரியும் சிறு சுருக்கங்களையும்
பெரிதாகி விடாமல்
சமாளிக்க தெரிந்தவள்...

எப்பொழுதும் மறக்காமல்
தன் நலன் காணமல்
இறைவனிடம் பிராத்தனை
செய்பவள்..

ஒரு வண்ணத்துப்பூச்சியின் கனவு!

படபடவென இறக்கைகளை
அடித்துக்கொண்டு
அந்த
சிட்டுக்குருவியைப் போல்
வானத்தில் பறக்க வேண்டும்!

வானவில்லில் மிதக்கும்
ஏழு வர்ணங்களையும் குழப்பி
என் சின்னங்சிறு
இறகில் பூசி
பெருமிதம் கொள்ள வேண்டும்!

நான் பறக்கையில்
என் வண்ணம் சிந்திய
செடிக்கொடிகள் சினுங்குவதை
ரசிக்க வேண்டும்!

தேன் உரிஞ்சும் போது
கோபப்படும் பூக்களை,
"கோபங்கொண்டாலும் நீயழகு"
என கிண்டல் செய்ய வேண்டும்!

என்னைக் கண்டு
பிடிக்க வரும்
குட்டிக்குழந்தையின்
தோளில் அமர்ந்து,
அதன்
சிரிப்பைக் காண வேண்டும்!

எல்லையில்லா
ஆனந்ததிடனும்,
நெருடலில்லா
வாழ்வுடனும்
இறைவனடி சேர வேண்டும்!

மழைத்துளிகள்,,,

மழை நின்றதும்,
மரக்கிளையில்
தங்கிடும்
மழைத்துளிகள்
போல்,

உன்னை கண்டதும்
பேசயிருந்த வார்த்தைகள்
எல்லாம்
தங்கி விடுகின்றன
என்னுள்...

போதாதா...?

உன் வீட்டு ஜன்னலோரத்தில்
ஏன் இவ்வளவு பூக்கள்?
நீ ஒருத்தி மட்டும்
வந்து நின்றாலே போதாதா...?

வீனையே...

என் இதய வீனையே...
என்னுள் நீ வாசிக்கும் ராகங்கள்
உயிர் என் உடலில் உள்ள வரை
என்னுள் வசிக்கும்...

ஆனந்தம்...

குனிந்து தூக்கியவனின்
கன்னத்தை
தன் பிஞ்சு கைகளால்
அடித்து
"வலிக்குதா அப்பா"
என கேட்டு
எச்சல் பட முத்தமிடுகிறாள்
என் குழந்தை...

மெல்ல கண்கள்
மூடி அனுபவிக்கிறேன்...

இதை விட ஆனந்தம்
உலகில் வேறு எதிலாவது உண்டா..!?

நம் நட்பு...

(1)
வயல்களிடையே
தட்டானை பிடிக்க
இருவராய் ஓடிய போது
கொஞ்சம் தவழ்ந்தது
நம் நட்பு...

(2)
மின்மினி பூச்சியை
பிடிக்க வெகு நேரம்
அமர்ந்து என் தோளில்
தாலை சாய்த்து
நீ தூங்கும் போது
கொஞ்சம் நடை பயின்றது
நம் நட்பு...

(3)
பள்ளி விட்டு வரும் போது
உன் புத்தகத்தை நானும்
என் புத்தகத்தை நீயும்
சுமந்து வரும் வழியெல்லாம்
மொட்டாய் மலர்கின்றது
நம் நட்பு...

(4)
ஒரு மழைக்காலத்தில்
எனக்கு வந்த காய்ச்சல்
பக்கத்தில் அமர்ந்திருந்த உனக்கும் வந்து
இருநாள் கழித்து பார்க்கும் போது
நல்லாயிருக்கியானு இருவரும் ஓரே சமயம்
சேர்ந்து கேட்டு சிரித்த போது
பூவாய் மலர்ந்து மணம் வீசுகிறது
நம் நட்பு...

(5)
மேல் படிப்புக்காக
திசைக்கொருவராய் பிரிந்து
பலவிதமான பிரச்சனைகளிடையும்
குறுஞ்செய்தி மூலம் எப்பொழுதாவது
பேசிக்கொள்ளும் நம்மை
தூரமாகி விடாமல்
இறுக்கமாய் தொடர்கின்றது
நம் நட்பு...

தொடரும்...

என் காதல்..

குளக்கரையோரம்
வளர்ந்து நிற்கும்
நாணல்களிடையே
துள்ளி விளையாடும்
மீனாய் என் காதல்...

ரசிகை..

தன்னைச் சுற்றி வட்டமிடும்
பட்டாம் பூச்சிக்கு
விரல் நீட்டி
அமர
இடம் தருகிறாள் அவள்...

அவளின்
ரசிகையாகிறேன்
நான்..

ஏமாற்றம்

அந்த சாலையோரம்
பூக்கும் பூக்கள் கூட
வட தொடங்கி விட்டன..
உன் வாரவை
எதிர்பார்த்து...

Valkaiyum apadithan..

pala kathaikaluku
alagana aramam..
alagana subam..
irupathe aparbam..

valkaiyum apadithan..

alagana aramam illatha kathaiku,
arbutha mudivu irukum..
ramiyathudan arammabikum kathaiku,
aalamana vethanai mudivaga amaiyum..

valkaiyum adapi than..
purithu..unarthu...
mudivukalai edu..
aduthu yeana nadake pogeratho endre kavalayei vidu..

valkaiyin arputham yentha nodiyulum arambammagamlam..

Amma...

kai needi,
manathai thodum vitai
kadavul
ulagathil ore oruvaruku madumathan
soli thanthu ullan..
athu yaar yeana teriyuma..

amma..

Tedal..

entha bumiye,
oru poovanam..
ungal pukalai thedungakal..

entha valkaiye,
oru sithanam..
ungal valthinai thedungkal...

Nee pesum..

nee pesum varthaikalidaiye than,
ovaoru nodiyilum puthithai,
kavithai neikiren nan..

Life...

For everthing you missed you have gained something else;and for evething you gain, you lose something else.
its about your outlook towards life.You can either regret or rejoice.

kadru malarkal..

kanavil malarum kadru malkarkalai kadril vidu vidathe..
kaikalil enthi kol..
kanavukalai yenni manathil sudi kol..
ithu than kanavukaluku nee tharum parisu..

Bumi..

malarkalin ithayam endu unarthe kanathil..
pukkalai mithikamal..
bumiku valikaamal..
epadi nadake pogeren..

Need a heart..

The most lovely things in this world can't be
see easily by our eyes and hold by our hands..
but we need a heart to felt.

Courage..

Standing in what you believe in..
Regardless of the odds against you..
And pressure that tears at your resistance,
means courage..

Love is...

Love can sometimes be magic.
But magic can sometimes...just be an illusion.
Anyone can catch your eyes, but it takes someone special to catch your heart.
Maybe God wants us to meet a few wrong people before meeting the right one so that when we finally meet the right person, we will know how to be grateful for them.
The best and most beautiful things in the world can not be seen,
nor touched but are felt in the heart.

என்னைப் பற்றி சில வரிகள்...

கவியுலகில் காலுன்றி நடைப் பயில ஆசை!
பிழையிருப்பின் கைநீட்டி உதவிக்கோரும் சிறு குழந்தை நான்!

இது வரை