சிதறிய கவித்துளிகள்...

மனம் சிதறிய சில கவித்துளிகளுடன் நான்...

எப்படி சொல்லி புரிய வைப்பது?

"ரொம்ப துணிச்சலான பெண்"யென
சுற்றித்தாரிடமெல்லாம் நல்ல பெயர் எனக்கு...

வெகு நாளாய் உன்னிடம்
காதல் சொல்ல சொல்லி
மன்றாடுகிறது மனது..

நாளை சொல்கிறேன் என
நாட்களை தள்ளுகிறேன் நான்..

இப்பொழுதெல்லாம்
ஏமாற்ற கனலில் மனம்...

எப்படி சொல்லி புரிய வைப்பது?

நீ எதிரே வருகையில்
ஒட்டு மொத்த துணிச்சலும்
என் பின்னால் அல்லவா
ஒளிந்து கொள்கிறது....

0 comments:

என்னைப் பற்றி சில வரிகள்...

கவியுலகில் காலுன்றி நடைப் பயில ஆசை!
பிழையிருப்பின் கைநீட்டி உதவிக்கோரும் சிறு குழந்தை நான்!