சிதறிய கவித்துளிகள்...

மனம் சிதறிய சில கவித்துளிகளுடன் நான்...

மௌனங்களில் வாழ ஆரம்பிகிறேன் நான்…

வேலை முடிந்து
சாலை நெரிசலில் மாட்டி
வாடகையறைக்கு வந்து,
குளித்து,சாப்பிட்டு
மடி கணினியில்
படங்கள் பார்த்தும்,
பாடல்கள் சில கேட்டும்,
யாருடனும் பேச வேண்டிய
அவசியமின்றி
மௌனங்களில் வாழ ஆரம்பிகிறேன் நான்…