வாழ்க்கையின் தாகங்கள்
முடிவில்லாதவை....
ஒரு நிலையில்
மழை நீர் போதும்
என சொல்லும்...
இன்னும் கொஞ்சம் போக
அருவி நீரை வேண்டும்
என சொல்லும்...
இறுதியைக் கடக்க
சேற்று நீரை அள்ளிக் கொள்
என சொல்லும்...
அதுவும் போதாமல்,
உலகிலுள்ள நீரையெல்லாம்
தானம் கேட்டு, தாகம் தீராமல்...
உன்னிடமும் கையேந்தும்,
உன் கண்ணீருக்காக...
தாகங்கள்...
Labels: பொது