சிதறிய கவித்துளிகள்...

மனம் சிதறிய சில கவித்துளிகளுடன் நான்...

எத்தனை அனுமானங்கள்!

நீ போகும் பாதையில் உதிர்ந்து கிடக்கும் பூவாயிருந்து
என் காதலை சொல்கிறேன்,
நான் கிழே கிடப்பதால் உன் செவிகளுக்கு எட்டவில்லை போலும்...


உன் முகத்தை தொட்டு செல்லும் காற்றில் கலந்து
என் காதலை சொல்கிறேன்,
உன்னை மோதி செல்வதால் நீயுணர வில்லை போலும்...


நீ விளையாடும் மழைத்துளிகளில் ஒன்றாயிருந்து
என் காதலை சொல்கிறேன்,
நான் உருண்டோடி விடுவதால் நீ கவனிக்க வில்லை போலும்...


இப்படி எத்தனை அனுமானங்களை நானே உருவாகிக் கொண்டு
இந்த காதலை ஏமாற்றுவது?

0 comments:

என்னைப் பற்றி சில வரிகள்...

கவியுலகில் காலுன்றி நடைப் பயில ஆசை!
பிழையிருப்பின் கைநீட்டி உதவிக்கோரும் சிறு குழந்தை நான்!