சிதறிய கவித்துளிகள்...

மனம் சிதறிய சில கவித்துளிகளுடன் நான்...

மனைவி...

சமையல் அறையில்,
கருங்புகைக்குள்
அடிக்கடி காணமல்
போபவள்...

மழைத்துளிகளிடையே
தோய்த்த துணிகளை
காப்பாற்ற ஓடுபவள்...

அழும் சிறு குழந்தையை
மார்பில் அணைத்து
சிரிக்க வைப்பவள்..

வேலைக்கு போனாலும்
வீட்டு வேலைகளை
விட்டு வைக்காமல்
கவனிப்பவள்..

கணவன் முகத்தில்
தெரியும் சிறு சுருக்கங்களையும்
பெரிதாகி விடாமல்
சமாளிக்க தெரிந்தவள்...

எப்பொழுதும் மறக்காமல்
தன் நலன் காணமல்
இறைவனிடம் பிராத்தனை
செய்பவள்..

1 comments:

RAGUL November 17, 2008 at 11:30 PM  

kuduthu vaitha kanavan than.....

என்னைப் பற்றி சில வரிகள்...

கவியுலகில் காலுன்றி நடைப் பயில ஆசை!
பிழையிருப்பின் கைநீட்டி உதவிக்கோரும் சிறு குழந்தை நான்!