சிதறிய கவித்துளிகள்...

மனம் சிதறிய சில கவித்துளிகளுடன் நான்...

காதல் கனல்!

எனக்கு பிடித்த பூ எது
என நீ கேட்கிறாய்…
நேர்மையெனும் பூவை
எனக்கு பரிசளி!
நம் காதல் செழித்து வளரும்!
*
உனக்காக
உயிரை கூட விடுவேன்
என
நீ பேசும் காதல் மொழி
ஒரு புறமிருக்கட்டும்!

முதலில்,
உன் உயிரை
புகையாய் கரைத்திடும்
வெண் சுருட்டை விடு!
*
என்னை
நிலைகெட
செய்யும்
ஒரே மாது
நீதான்
என குற்றம்
சாட்டுகிறாய்!
எப்போது,
உணர போகிறாய்?
உன் நிலையழியே
அந்த மது தான்
என!

1 comments:

ச. ராமானுசம் February 6, 2009 at 3:03 AM  

அன்புமணி ராமதாசின் தங்கையா நீங்கள் !!!!?

என்னைப் பற்றி சில வரிகள்...

கவியுலகில் காலுன்றி நடைப் பயில ஆசை!
பிழையிருப்பின் கைநீட்டி உதவிக்கோரும் சிறு குழந்தை நான்!