சிதறிய கவித்துளிகள்...

மனம் சிதறிய சில கவித்துளிகளுடன் நான்...

தொலைக்க விடாமல் மனம்...




வீசும் தென்றல்
மெல்ல என் இதயகதவுகளை
திறந்து வைத்தது...

அங்கே
நான் பூட்டி வைத்திருந்த
காதலை
அதனுடன் கொண்டு
சென்றது...

பெயும் மழையில்
என் காதலும்
சேர்ந்தே நனைகின்றது...

சுழல் காற்றிடையே
என் காதல்
சிக்கிக் கொண்டு
தவிக்கின்றது...

என் மனமோ
பட படக்கின்றது...
எங்கே
அது தொலைந்து
விடுமோ என...

தொலைக்க
நினைக்கிறேன் நான்...
தொலைக்க
விடாமல் மனம்...


1 comments:

Unknown January 17, 2009 at 11:40 PM  

indha kavidhai nandraha ullathu.
yes you are right,ella kadhalarhalum manathai tholaithu nammaiyum tholaithu viduvom.that is the hallmark of LOVE.WISH YOU ALL THE BEST.

என்னைப் பற்றி சில வரிகள்...

கவியுலகில் காலுன்றி நடைப் பயில ஆசை!
பிழையிருப்பின் கைநீட்டி உதவிக்கோரும் சிறு குழந்தை நான்!