சிதறிய கவித்துளிகள்...

மனம் சிதறிய சில கவித்துளிகளுடன் நான்...

காதலே…

காந்தம் கைவாசம்
வைத்திருக்கிறாயா?
அப்பாப்பா…
எத்தனை மனிதர்கள்
உன் வசம்!
*
நீ
நீர் ஊற்றி அல்ல…
உயிர் ஊற்றி!
*
உன்னை
மோசமாக
கிறுக்கினாலும்
எப்பொழுதும்
போல
அழகாய்
தெரிகிறாயே
எப்படி?
*
சூரியனை மட்டும்
விழி வாங்கும் சூரிய கந்திகள்
இன்று உன்னை பார்க்கின்றன !
அது சரி…
மற்றங்களை ஏற்படுத்துவதே
உன் கலையாயிற்றே!
*
உலகில் உள்ள
மொத்த மலர்களையெல்லாம்
விலைக்கு வாங்கி விட்டயா?
உன்னை சொல்லிட
எப்போதும் இவைகளையே
தூதுக்கு அனுப்புகிறாயே?
*
கொஞ்சம் கொஞ்சமாய்
கருகும் குச்சியில்
தீயில்லை…
இருந்தாலும்
சுடர் விடுகிறதே
தீக்குச்சி !
இதுவும்
உன் வேலையோ?
*

0 comments:

என்னைப் பற்றி சில வரிகள்...

கவியுலகில் காலுன்றி நடைப் பயில ஆசை!
பிழையிருப்பின் கைநீட்டி உதவிக்கோரும் சிறு குழந்தை நான்!