சிதறிய கவித்துளிகள்...

மனம் சிதறிய சில கவித்துளிகளுடன் நான்...

என் காதல்!

சிறகு முளைத்த
சின்ன பறவை
என் காதல்!

பறக்க துடித்தாலும்
நிதானமாய்
தயங்கி நிற்கிறது
அது!

கீழே விழுந்து
விடுவோமா
என்ற பயம்
ஒரு புறம்!

உயரத்தை
உணர்ந்த கலக்கம்
ஒரு புறம்!

எது எப்படியாயினும்
அதன் சிறகுகளை
முடுக்கி விட
வேண்டும்!

0 comments:

என்னைப் பற்றி சில வரிகள்...

கவியுலகில் காலுன்றி நடைப் பயில ஆசை!
பிழையிருப்பின் கைநீட்டி உதவிக்கோரும் சிறு குழந்தை நான்!