சிதறிய கவித்துளிகள்...

மனம் சிதறிய சில கவித்துளிகளுடன் நான்...

நீ என்பதால்...



நீ என்பதால்,
பனியின் வரவுக்கு காத்துகிடக்கும் காலைபொழுது, நான்...

நீ என்பதால்,
மழைத்துளியை எட்டி பிடிக்க தவிக்கும் தளிர், நான்...

நீ என்பதால்,
காற்றோடு போட்டி போடும் செம்பந்தியின் வாசம், நான்...

நீ என்பதால்,
குட்டி பொம்மைகளுடன் தூங்கும் களங்கமில்லாத குழந்தை, நான்...

நீ என்பதால்,
புத்தகத்தில் சிறுவன் எழுதிடும் முதல் வடிவம், நான்...

நீ என்பதால்,
பல கோணங்களில் உருகுலையும் உயிர்கொண்ட காதல்மேகம், நான்...

என்னைப் பற்றி சில வரிகள்...

கவியுலகில் காலுன்றி நடைப் பயில ஆசை!
பிழையிருப்பின் கைநீட்டி உதவிக்கோரும் சிறு குழந்தை நான்!