சிதறிய கவித்துளிகள்...

மனம் சிதறிய சில கவித்துளிகளுடன் நான்...

நின்மலன் (நான்)...


நீ சிந்தும் புன்னகைக்கே,
சிவந்த பூவாய் பூத்து கிடக்கும் பூமி...

நீ பார்க்கும் பார்வைக்கே,
இலை வெட்டுகளை இணம் கேட்கும் மரங்கள்...

நீ பேசும் பேச்சுகளுக்கே,
ஓடை நீரின் மொழிகளை ஒதுக்கும் ஓடை மீன்கள்...

நீ கொண்ட காதலுக்கே,
வானம் கொண்ட வீண்மினை வம்புகிழுக்கும் நின்மலன் (நான்)...

0 comments:

என்னைப் பற்றி சில வரிகள்...

கவியுலகில் காலுன்றி நடைப் பயில ஆசை!
பிழையிருப்பின் கைநீட்டி உதவிக்கோரும் சிறு குழந்தை நான்!