சிதறிய கவித்துளிகள்...

மனம் சிதறிய சில கவித்துளிகளுடன் நான்...

இதோ என் ஆசிகள்!

நல்வாழ்வு உன்னை வந்தடைய
இதோ என் ஆசிகள்!

புகழ் சூட வாழ
கல்வியை வெற்றிடு!

ஆற்றலை அணையின்றி வெளிப்படுத்தி
வெற்றியை உன் வசமாக்கிடு!

துணிவென்பதை துணியாக உடுத்திக்கொள்,
இளமையை இனிமையுடன் நகர்த்திடு!

பொன் - பொருள் இல்லார்க்கு இவ்வுலகமில்லை,
நன்மக்களைப் பெற்று மகிழ்ந்திடு!

நெல் சோறாகும் தருணம்,
உன்னை உயர்த்திய உழைப்பை அனுபவித்திடு!

உன் பெருமை தாரணியை சுழ,
என்றும் நல்லுள்ளம் கொண்டு வாழ்ந்திடு!

இன்பங்களில் பெரிது நோயின்மை,
உன் ஆயுளைத் தடையின்றி நீடித்திடு!

வாழ்த்து கூறிட வார்த்தைகள் நூறு வேண்டாம்!
புனித உள்ளம் ஒன்றே போதும்...

0 comments:

என்னைப் பற்றி சில வரிகள்...

கவியுலகில் காலுன்றி நடைப் பயில ஆசை!
பிழையிருப்பின் கைநீட்டி உதவிக்கோரும் சிறு குழந்தை நான்!