நல்வாழ்வு உன்னை வந்தடைய
இதோ என் ஆசிகள்!
புகழ் சூட வாழ
கல்வியை வெற்றிடு!
ஆற்றலை அணையின்றி வெளிப்படுத்தி
வெற்றியை உன் வசமாக்கிடு!
துணிவென்பதை துணியாக உடுத்திக்கொள்,
இளமையை இனிமையுடன் நகர்த்திடு!
பொன் - பொருள் இல்லார்க்கு இவ்வுலகமில்லை,
நன்மக்களைப் பெற்று மகிழ்ந்திடு!
நெல் சோறாகும் தருணம்,
உன்னை உயர்த்திய உழைப்பை அனுபவித்திடு!
உன் பெருமை தாரணியை சுழ,
என்றும் நல்லுள்ளம் கொண்டு வாழ்ந்திடு!
இன்பங்களில் பெரிது நோயின்மை,
உன் ஆயுளைத் தடையின்றி நீடித்திடு!
வாழ்த்து கூறிட வார்த்தைகள் நூறு வேண்டாம்!
புனித உள்ளம் ஒன்றே போதும்...
இதோ என் ஆசிகள்!
Posted by
G.VINOTHENE
Friday, July 10, 2009
Labels: வாழ்த்து
0 comments:
Post a Comment