சன்னலின் ஒரத்தில்
முத்து முத்துக்களாய் வரிசை
நிற்கும் மழைத்துளிகள்...
சாலையோர
நீர் தேக்கங்ளில்
காதித கப்பல்
விடும் மழலைகள்...
தாமரை இதழிலிருந்து
நிலத்தை எட்டி பார்க்கும்
ஒற்றை நீர் துளி...
ஆனந்த குளியலால்
வெப்பமரக்கிளையில் தலைத்தொட்டும்
புறாக்கூட்டம்...
பூமியின் வெப்பத்தைத்
தட்டி எழுப்பும் மழைக்காற்றை
வரவேற்க்கும் முற்றத்து
கற்றாடிகள்...
ஒரு கோப்பை தேநீரை
ருசித்தப்படி
கதவோரத்தில் நான்...
ஒரு மழை விட்ட நாளில்...
Posted by
G.VINOTHENE
Saturday, July 25, 2009
Labels: ரசித்தவை
0 comments:
Post a Comment