சிதறிய கவித்துளிகள்...

மனம் சிதறிய சில கவித்துளிகளுடன் நான்...

மறந்து போகும் நான்...

கண் மூடி ரசிக்க தோணும்
மெல்லிய இசை நீ...

தேகத்தை வருடி விடும்
இள தென்றல் நீ...

இலைகளின் அசைவுகளில்
பேசிக் கொள்ளும் மெளனம் நீ...

கலைந்து கிடக்கும் மேகங்களின்
திரட்டேடு நீ...

காணும், உணரும் யாவற்றிலும் நீயாக
இருக்கும் போது, நான் யார் என்பதை மறந்து தான் போகிறேன்,
பரந்தாமனே...

0 comments:

என்னைப் பற்றி சில வரிகள்...

கவியுலகில் காலுன்றி நடைப் பயில ஆசை!
பிழையிருப்பின் கைநீட்டி உதவிக்கோரும் சிறு குழந்தை நான்!