கைக்காட்டி
வானத்தைப் பார்த்து
சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாள்
அந்த சின்ன கண்மணி...
அவளின் ஆனந்ததை
பங்கு கேட்க அவளருகில்
சென்றமர்ந்தேன்...
கண்கள் பளக்க
என்னைப் பார்த்தவள்
மெதுவாக கிசுகிசுத்தாள்
"பூவானம் கண்ணடிக்குது"
புரியாமல் இருண்ட
வானத்தைக் கூர்ந்தேன்
அவளைப் போல்
மணி மணியாய் கண்சிமிடியது
அவளமைத்த
நட்சத்திர பூவனம்!
மழலை கவிதை
Posted by
G.VINOTHENE
Tuesday, September 15, 2009
Labels: மழலை
0 comments:
Post a Comment