ஆள் நடமாட்டமில்ல தெரு
பைரவனின் குரலடங்கா பொழுதது
சன்னலின் வழி வானத்தை
வெறித்தப்படி அவள்...
இவ்வேளையில்
கதைச் சொல்ல
நிலவு வரும்
ஆயிரம் வீண்மீன் கூட்டமிருக்கும்
இன்று,
கருவிழி காணுமிடங்கெங்கும்
கருங்கிருட்டு!
விழி சுருக்கி,
கருங்கிருட்டை
துளைக்க முயல்கிறாள்
அவள்...
சலனமின்றி
அவளையே
விழித்துப் பார்க்கிறது
இரவு!
(உரையாடல் கவிதைப் போட்டிக்கான கவிதை)
விழித்துப் பார்க்கிறது இரவு!
Posted by
G.VINOTHENE
Sunday, December 27, 2009
Labels: தனிமை
13 comments:
அருமையான கவிதை
நல்ல நடை
வெற்றிபெற வாழ்த்துகிறேன்.
அழகாய் இருக்கு கவிதை
வெற்றி பெற வாழ்த்துக்கள்
சல்லனம் (சலனம்) தவறு என்று நினைக்கிறேன்.
விஜய்
தவறாய் சுட்டிக் காட்டியதற்கு நன்றி.:)
மிக அழகான கற்பனை. தலைப்பே ஒரு கவிதைபோல உள்ளது. வாழ்த்துக்கள்
//பைரவனின் குரலடங்கா பொழுதது//
இதன் பொருள் என்ன?
pls remove word verification
//பைரவனின் குரலடங்கா பொழுதது//
இந்த வரியின் அர்த்தம்:
நாய் குரல் அடங்காமல் @ குரைக்கும் சத்தம் அடங்காத நேரம்.
நன்றிங்க உழவன்.
மிக அருமை வெற்றி பெற வாழ்த்துகிறேன்
நல்ல கவிதை. மிகவும் பிடித்தது.
நல்லாருக்குங்க உங்க கவிதை...
நன்றிங்க thenammailakshmanan, இராவணன், ராம்குமார் - அமுதன்.=)
all the best...
nice one
all the best:)
thank u basachandar...=)
Post a Comment