சிதறிய கவித்துளிகள்...

மனம் சிதறிய சில கவித்துளிகளுடன் நான்...

என் காதல்!

பனி இரவை
காம்பு நுனியில் நின்று
தவம் செய்யும்
பவள மல்லியாய்
என் காதல்!

நீ
வந்தால் மட்டுமே
தரையில் விழுந்து
உயிர்ப்பிக்கும் அது!

என்னைப் பற்றி சில வரிகள்...

கவியுலகில் காலுன்றி நடைப் பயில ஆசை!
பிழையிருப்பின் கைநீட்டி உதவிக்கோரும் சிறு குழந்தை நான்!