சிதறிய கவித்துளிகள்...

மனம் சிதறிய சில கவித்துளிகளுடன் நான்...

நிலா



தீ பிழம்பிலிருந்து
கொஞ்சம் தீ வாங்கி
இருண்டிரும் பிரபஞ்சத்தை
விளக்கேற்றி வைக்கிறாய்!

கண்ணிருந்தும் இருட்டில்
குருடர்களாகி போகும்
மனிதருக்கு ஒளியாகி
வழிக்காட்டுகிறாய்!

தனிந்த பொழுதுக்கு
உயிர் ஊட்டி கவிதையெழுதும்
கவி பெருமக்களின் கவிப்பொருளாய்
உருமாறுகிறாய்!

நேசங்களைப் பிரிந்து
துயிரும் நெஞ்சங்களை
அரவணைத்து, புத்துயிர்
தந்து துயில் கொள்ள செய்கிறாய்!

வெண்முகம் காட்டி,
இயற்கையன்னையின்
அழகை மெருகூட்டிடும் நீ
பிரபஞ்சத்தின் பொக்கிஷம்!

3 comments:

Pinnai Ilavazhuthi January 4, 2010 at 8:28 PM  

அற்ப்புதமான வரிகளில் அழகாக சொல்லி இருக்கின்றிர்கள் வாழ்த்துக்கள்

thiyaa January 5, 2010 at 8:21 AM  

அருமை
நல்ல நடை

நல்ல பதிவு
வாழ்த்துகள்

பாலச்சந்தர் February 8, 2010 at 2:14 AM  

romba nalla irukku:)