சிதறிய கவித்துளிகள்...

மனம் சிதறிய சில கவித்துளிகளுடன் நான்...

அவனின் நிழல்...

வானம் தன்னிறத்தை இழந்து
மஞ்சளை பூச தொடங்க..
அடிவானத்தை பார்த்தப்படி
அமர்ந்திருக்கிறாள் அவள்...

தனியே சிரித்து,பேசி
கொண்டிருக்கும் அவளைப்
பார்த்தப்படியே கூடு திரும்புகின்றன
பறவைகள்...

வானம் தன்னிறத்தை இழந்து
கருளைக் கவ்விக் கொண்ட பின்னே
மெல்ல எழுந்து நடக்கிறாள்,
அவளுடன் சேர்ந்து நடக்கிறது
அவனின் நிழல்...

0 comments: