பிரிவுயென்னும் சொல்லின் பின்
ஒளிந்திருக்கும் அர்த்தம்,
புரியாத புதிராய்
பூட்டி வைத்திருக்கும்
அறையில் சுழழும்
காற்றாய்
இன்னும் என்னுள்
சுழன்ற வண்ணமாய்…
விடை காண முற்படும்
பொழுதெல்லாம்
மனதில் எதோ பாரம்…
என்னை அழுத்தி கொன்று விடுகின்ற மாதிரி
ஒரு உணர்ச்சி!
கண்களில் பெருக்கெடுக்கும்
கண்ணீர் வெள்ளத்தை
கட்டுபாடுயின்றி கன்னங்களை
நனைக்க…
மீண்டும் முணுக்கின்றது
என் உதடு!
‘பிரிவு’
இன்னொரு மரண
போராட்டத்திற்கு
தயார் ஆகின்றேன்
நான்!
‘பிரிவு’
Posted by
G.VINOTHENE
Thursday, March 12, 2009
Labels: காதல் கவிதை
0 comments:
Post a Comment