சிதறிய கவித்துளிகள்...

மனம் சிதறிய சில கவித்துளிகளுடன் நான்...

இமைக்குள் உறங்கி போகும் உன்னைப்பற்றி...

அந்நாளில் நினைவுகளை
ஒவ்வொன்றாய் என்னிதய
கதவுகளைத் திறந்து வைக்க...

ஒரு காலை பொழுதில்
மரத்தடிக்கு அழைத்துச் சென்று
மரக்கிளையில் தங்கிடும்
பனித்துளிகளைத் துளி துளியாய்
என் மீது துளிர செய்து...

ஒரு மாலை வேளையில்
மஞ்சள் நிற வானம்
தன்னைத் திரட்டிக்கொண்டு
நீல கடலில் புதைக்கும்
அழகை என்னுள் புத்துளிர்க்க செய்து...

நான் கேட்டு இல்லையென்று
சொல்லாத குணம் உனது
பொய் கோபம் கொண்டாலும்
முத்தமிட்டு அணைக்கும் உள்ளம் உனது

இன்று ஏனோ,
இமை மூடி அனுபவித்து
எழுத முயல்கிறேன்;

இமைக்குள் உறங்கி போகும் உன்னைப்பற்றி...

3 comments:

Anonymous August 1, 2010 at 6:47 AM  

காதலின் வழியா ?

Anonymous August 1, 2010 at 6:48 AM  

காதல் என்றாலே வழிதான?

Anonymous August 1, 2010 at 6:50 AM  

காதல் என்றாலெ வழி தானா...?